முக்கிய செய்திகள்



மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத் கட்சியின் எம்.எல்.ஏ.வை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 

15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ராஷ்டீரிய ஜனதா தள் கட்சியின் எம்.எல்.ஏ. ராஜ் பாலாபாவிற்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவாடாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 6-ம் தேதி புகார் கொடுத்து உள்ளார், இதனையடுத்து கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நலந்தா போலீஸ் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 164-ன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி எம்.எல்.ஏ.வின் புகைப்படத்தை காட்டியதும், இவர்தான் என்று உறுதிசெய்து உள்ளார். கடந்த வருடம் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தள் கட்சியின் சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முந்தைய ராஷ்டீரிய ஜனதா தள் அரசில் அமைச்சராகவும் பணிபுரிந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமியை அப்பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்தான் அழைத்து சென்று உள்ளார் என்றும் மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து அவருக்கு பல்வேறு அழைப்புகள் விடுக்கப்பட்டது, ஆனால் அவரிடம் இருந்து எந்தஒரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. 

Tags:

No Comment to " மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கட்சி எம்.எல்.ஏ.வை கைதுசெய்ய உத்தரவு "