மும்பையில் இன்று மாலை நடைபெற்ற 'மேக் இன் இந்தியா வாரம்' அரசு நிகழ்ச்சியில் திடீரென பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா அரசின் முக்கிய நிகழ்ச்சியான இந்த விழாவில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கவர்னர் வித்யாசாகர் ராவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஆமிர்கான், நடிகை ஹேமமாலினி ஆகியோரும் இருந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் விழா மேடை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விழா மேடையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
நடிகர் அமிதாப்பச்சன் மேடையில் இருந்தபோது திடீரென தீ பரவத்தொடங்கியிருக்கிறது. பிறகு, சிறிது நேரத்தில் மளமளவென மேடை முழுவதும் பரவிவிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
No Comment to " மும்பை 'மேக் இன் இந்தியா' அரசு விழாவில் பயங்கர தீ விபத்து "